தொடர் தோல்விகளால் துவண்டுள்ள சென்னை அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி

3


புதுடில்லி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.


18 வது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த 62வது லீக் போட்டியில், சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பீல்டிங் தேர்வு செய்தார்.


இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு டேவன் கான்வே(10), உர்வில் படேல்(0) ஏமாற்றினர். மற்றொரு துவக்க வீரர் அயூஷ் மாத்ரோ அதிரடியாக விளையாடினார். அஷ்வின் 13 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய பிரேவிஸ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார்.


அயூஷ் மாத்ரோ 20 பந்துகளில் 43 ரன்களும், ஷிவம் துபே, 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாட முடியாமல், தோனி (16 ரன்) ஏமாற்றினார். இறுதியில் சென்னை அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் ஆகாஷ் மத்வால், யித்விர் சிங் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.


இதனையடுத்து 188 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள், ஜெய்ஸ்வால் (36 ரன்), சூரியவன்ஷி (57 ரன்) அதிரடியாக விளையாடினர். சஞ்சு சாம்சன் 41 ரன்களில் அவுட்டானார். ரியான் பராக் 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். இறுதியில் 17.1 வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டிய ராஜஸ்தான் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர் தோல்வி:



13 போட்டிகளில், 3ல் மட்டுமே வெற்றி பெற்று, 10 தோல்விகளை தழுவியுள்ள சென்னை அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. குஜராத் அணியுடன் வரும் 25ம் தேதி, தனது கடைசி லீக் போட்டியில் சென்னை அணி விளையாட உள்ளது.

Advertisement