இறந்த அலுவலர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் கருணைத்தொகை

தர்மபுரி :தர்மபுரி கூட்டுறவு கட்டட சங்கத்தின் காசாளர் ஸ்ரீகாந்த் கடந்த மார்ச் மாதம் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது குடும்பத்திற்கு கருணை தொகையாக, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி வழங்கினார்.

இதை ஸ்ரீகாந்த் மனைவி சரோஜா மற்றும் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். அப்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பொது மேலாளர் கருணாகரன், வங்கி வருவாய் அலுவலர் பிரேம், கூட்டுறவு கட்டட சங்க செயலாளர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement