வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து மூன்று பேர் பலி

பெருங்குடி:வளையங்குளத்தில், வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில், பேரன், பாட்டி உட்பட மூவர் இறந்தனர்.
மதுரை மாவட்டம், வளையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மாபிள்ளை, 65.
நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வீட்டு வாசலில் பேரன் வீரமணி, 10, பக்கத்து வீட்டில் வசிக்கும் வெங்கட்டி, 55, ஆகியோருடன் அம்மாபிள்ளை பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் மூவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வெங்கட்டி இறந்தார்.
சிகிச்சையில் இருந்த அம்மாபிள்ளை, வீரமணி நேற்று இறந்தனர். பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை
-
மாநில அந்தஸ்து வேண்டி கையெழுத்து இயக்கம்
Advertisement
Advertisement