சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கும் பணி விறுவிறு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, மேட்டுத் தெரு செல்லும் சாலையின் குறுக்கே, ஏரிகளின் உபரிநீர் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாய் மீது தரைப்பாலம் இருந்தது.
ஒவ்வொரு மழைக்காலங்களிலும், கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தில் தரைப்பாலம் முழ்குவதும், மூன்று நாட்கள் போக்குவரத்து பாதிப்பதும் வழக்கமாக இருந்து வந்தது.
கடந்த 2023ம் ஆண்டு கனமழையின் போது, தரைப்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து சென்றதால், மணல் மூட்டைகள் வைத்து சீரமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, தரைப்பாலத்தை புதுப்பிக்க 1.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இருபது நாட்களுக்கு முன் பாலம் கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், தற்போது துரிதமாக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'நடப்பாண்டு மழைக்காலத்திற்குள், இப்பாலம் பயன்பாட்டிற்கு வரும்' என, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும்
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை