பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; குழந்தைகள் 4 பேர் பலி; 38 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பள்ளி பஸ்சை குறிவைத்து நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் குழந்தைகள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 38 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குர்ஷ்தர் மாவட்டம் ராணுவ பள்ளிக்கூடம் உள்ளது. இதில் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி சென்ற பஸ்சை குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பஸ் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் குழந்தைகள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 38 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தஞ்சையில் வேன் - அரசு பஸ் மோதி விபத்து; 5 பேர் பலி
-
கடனில் மூழ்கிய பாகிஸ்தான் கையேந்தி நிற்கிறது; ரூ.41,170 கோடி கடன் வாங்க முடிவு
-
சூர்யகுமார், நமன் தீர் அதிரடி... 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை
-
மற்றொரு பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு
-
ஓய்வுபெற்ற பி.எஸ்.எப்., அதிகாரியிடம் ரூ.24 லட்சம் மோசடி: டில்லியில் 2 பேர் கைது
-
கடற்கரை... கடற்கரை தானே...? எப்படி கல்லறையாக மாறியது? சீமான் கேள்வி
Advertisement
Advertisement