தஞ்சையில் வேன் - அரசு பஸ் மோதி விபத்து; 5 பேர் பலி

1

தஞ்சை: தஞ்சை அருகே வேனும், அரசு பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



கர்நாடகாவில் இருந்து வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. தஞ்சையின் செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் வந்த போது, திருச்சியை நோக்கி சென்ற அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழக்க பலி 5 ஆக அதிகரித்தது. மற்றவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.


காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement