மண்டியிடவைக்கும் மணல் குவியல்; அலட்சியத்தால் அவதி

திண்டுக்கல் மாவட்டத்தில் நான்குவழிச்சாலை முதல் கிராம ரோடு வரை மணல் குவிந்து கிடக்கிறது. இதில் டூவீலர் வாகன ஓட்டிகள்தான் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.

இதன் காரணமாக விபத்து என்பது அன்றாடம் நடக்கிறது. இதோடு காற்று வீசும் போது துாசிகள் பறந்து பஸ்,கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் கண்களை பதம் பார்க்கின்றன. இது போன்ற மணலை உடனுக்குடன் அகற்ற துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இனியாவது இதை முறைப்படுத்த வேண்டும்.

Advertisement