ரூ.35 கோடி மதிப்பிலான பணி அமைச்சரால் துவக்கிவைப்பு
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி வார்டு, 56க்கு உட்பட்ட பாண்டியன் நகர் - திருப்பதி கார்டன், பிரதான சாலை, குறுக்கு சாலை, இரணியன் வீதி என பல்வேறு பகுதிகளில், 4.06 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலையை அமைச்சர் முத்துசாமி நேற்று திறந்து வைத்தார்.
வார்டு எண்- 5ல் ஆயப்பாளியில், 1.58 கோடி ரூபாயில் தார்ச்சாலை பணி, எஸ்.எஸ்.பி.நகரில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளி கட்டடம் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். வார்டு எண்- 5 மொக்கையம்பாளையத்தில், 1.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்வுகளில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாராஷ்டிரா, கோவாவில் கனமழை கொட்டும்: வானிலை மையம் 'அலர்ட்'
-
பீஹாரில் கடும் மின்தடை; மொபைல்போன் வெளிச்சத்தில் தேர்வெழுதிய மாணவர்கள்
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 80 பேர் பலி
-
பேச மறுத்த காதலியை வெட்டிக் கொன்ற காதலன்: தானும் தூக்கிட்டு தற்கொலை
-
அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் வேறு எங்கும் தயாரித்தால் 25% வரி; அதிபர் டிரம்ப் புது அறிவிப்பு
-
கூட்டு பலாத்கார வழக்கில் ஜாமின்: வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்
Advertisement
Advertisement