அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட தொகுப்பு கண்காட்சியினை, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சோகண்டி ஊராட்சியல், அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் புகைப்பட தொகுப்பு, பொதுமக்களின் பார்வைக்காக நேற்று, வைக்கப்பட்டு இருந்தது.
இதில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், கலெக்டர், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., க்கள் பங்கேற்ற முக்கிய அரசு நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட புகைப்படங்களை, மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement