விடுதிக்கு செலவு செய்யும் நகராட்சி கழிப்பிடத்தை பராமரிக்காத அவலம்
குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில், இலவச கழிப்பிடம் இல்லாமல் இருக்கும் ஒரே பஸ் ஸ்டாண்ட் குன்னுார் பஸ் ஸ்டாண்ட் ஆகும். இங்கு பஸ் ஸ்டாண்ட் பராமரிப்புக்காக அரசு, 1.19 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில், தங்கும் அறை விடுதிகளை பொலிவு படுத்திய நகராட்சி, இங்குள்ள கட்டண கழிப்பிடத்தை சீரமைக்க முன்வரவில்லை.
கதவுகள் உடைந்துள்ளதுடன், கடும் துர்நாற்றமும் வீசுகிறது. உள்ளே செல்லவும் பலரும் தயங்குகின்றனர். சில நேரங்களில், இரவு, 8:30 மணிக்கே பூட்டி விடுவதால், வெளிப்புற பகுதிகளை பலரும் அசுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது. ஒருவருக்கு, 10 ரூபாய் வசூலிக்க, அனுமதி கொடுத்துள்ள நகராட்சி சுகாதாரமாக வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாடு முழுவதும் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று
-
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்; கோவை கமிஷனரிடம் புகார்!
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சிறை தண்டனை
-
கோவை, நீலகிரிக்கு 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுத்தது சென்னை வானிலை மையம்!
-
வட கிழக்கு மாநிலங்களில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு; முகேஷ் அம்பானி அறிவிப்பு
-
அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள்; சீமான் கிண்டல்
Advertisement
Advertisement