குளங்களில் நீர்மட்டம் சரிவு விவசாயிகள் கவலை
உடுமலை : உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், நிலத்தடி நீர் ஆதாரமாக, கிராமப்புற குளங்களே உள்ளன. பருவமழை சீசன்களில் மட்டும் இக்குளங்களுக்கு நீர் வரத்து இருக்கும். குளங்களில் தேக்கி வைக்கப்படும் மழை நீரால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்படும்.
அவ்வகையில், உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் கடந்த வடகிழக்கு பருவமழை சீசனில், பெரும்பாலான குளங்கள் நிரம்பியது.
மேலும், பாசன காலத்தில் மழை பெய்யும் போது, தண்ணீரை வீணாக்காமல், குளங்களில், தேக்கினர். இவ்வாறு, நிரம்பியிருந்த குளங்களில் தற்போது நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்காவிட்டால், நிலத்தடி நீர்மட்டம் குறையும்; கிணறு மற்றும் போர்வெல்களிலும், வரத்து பாதிக்கும். மழை பெய்யாவிட்டால், திருமூர்த்தி அணையிலிருந்து, அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
மேலும்
-
நாடு முழுவதும் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று
-
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்; கோவை கமிஷனரிடம் புகார்!
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சிறை தண்டனை
-
கோவை, நீலகிரிக்கு 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுத்தது சென்னை வானிலை மையம்!
-
வட கிழக்கு மாநிலங்களில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு; முகேஷ் அம்பானி அறிவிப்பு
-
அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள்; சீமான் கிண்டல்