அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு
புதுடில்லி:டில்லி வித்யுத் வாரிய ஓய்வு பெற்ற 18,737 ஊழியர்களுக்கு அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் கூறியதாவது:
டில்லி வித்யுத் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 18,737 ஊழியர்களுக்கும், அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.
ஏற்கனவே இருந்த 53 சதவீத அகவிலைப்படி இனி 55 சதவீதமாக வழங்கப்படும்.
அரசின் இந்த முடிவு, ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் தேவையான நிதி ஆதரவை வழங்கும். அவர்கள் தங்கள் குடும்பச் செலவுகளை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
-
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!
-
ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு
-
போலி கிளினிக் நடத்திய ஜோலி நான்காவது முறையாக சிக்கினார்
-
தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன
-
தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன: பா.ஜ., கேள்வி
Advertisement
Advertisement