51,000 கவுரவ ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் நியமனம்
பெங்களூரு: ''அரசு பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண, 51,000 கவுரவ ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என தொடக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தொடக்க பள்ளிகளுக்கு 40,000 ஆசிரியர்கள், உயர்நிலை பள்ளிகளுக்கு 11,000 ஆசிரியர்களை நியமித்து கொள்ள, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 29ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்விக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தால், காலியாக உள்ள கவுரவ ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளி திறப்பதற்கு முன்பே, ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
தொடக்க பள்ளி கவுரவ ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய், உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 12,500 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்
-
டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; பல மாநில முதல்வர்கள் பங்கேற்பு