தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி

தென்காசி; தென்காசி அருகே இரும்பு கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தை பலியானார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


தென்காசியில் ஊத்துமலை வட்டாரப்பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது. கடங்கநேரி என்ற கிராமத்தில் மின் கம்பம் அருகே இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.


அய்போது எதிர்பாராத விதமாக கம்பத்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 5 வயதே நிரம்பிய ஜமித்ரா என்ற குழந்தை சம்பவ இடத்திலே பலியானது.


மற்றொரு குழந்தையான பிரதிதா பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement