பொதுத்தேர்வில் அசத்தல் அரசுப்பள்ளிக்கு பாராட்டு
திருப்பூர் : திருமுருகன்பூண்டி அருகே ராக்கியாபாளையம் உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொது தேர்வெழுதிய மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கு காரணமான ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில், பாராட்டு விழா நடந்தது. 10ம் வகுப்பு பொது தேர்வில், முதல் மதிப்பெண், 488; இரண்டாவது மதிப்பெண், 483; மூன்றாவது மதிப்பெண், 479 எடுத்துள்ளனர். 15 மாணவர்கள், 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 23 மாணவ, மாணவியர், 400 - 450க்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பூண்டி நகராட்சி, 10வது வார்டு உறுப்பினர் சுப்ரமணியம், மா.கம்யூ., நிர்வாகிகள் வெங்கடாசலம், அருணாசலம், பாலசுப்ரமணியம், வையாபுரி, ராமசாமி, கார்த்திகேயன் உட்பட முன்னாள் மாணவர்கள் பலரும் பங்கேற்றனர்.
'இந்த தேர்ச்சி விகிதம் ராக்கியாபாளையம் கிராமத்துக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது' என, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறினர்.
மேலும்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்
-
டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; பல மாநில முதல்வர்கள் பங்கேற்பு