உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்

புதுடில்லி: ''ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது'' என நிடி ஆயோக் தலைவர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இது குறித்து நிடி ஆயோக் தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது: உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 5வது இடத்தில் இருந்த இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடானது. இந்தியாவின் பொருளாதாரம் இப்போது 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன. நாம் உறுதியாக இருந்தால், 3 ஆண்டுகளில், நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
நச் பதில்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலோ அல்லது வேறு இடங்களிலோ ஐபோன்களை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என்று கூறியது குறித்து கேட்டபோது,
''வரி விதிப்பில் மாற்றம் வரலாம். அது குறித்து ஏதும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்தியாவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும்'' என சுப்பிரமணியம் பதில் அளித்தார்.







மேலும்
-
குஜராத் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
-
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்
-
வெற்றியுடன் தொடரை முடிக்குமா சென்னை? கடைசி போட்டியில் பேட்டிங் தேர்வு
-
மூங்கில் மரங்கள் நாசம்; விவசாயிக்கு மின் ஊழியர்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு
-
போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!