நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை

நாகை: நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கருவூல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அபிநயா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.


நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அபிநயா என்ற பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.


தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த நாகூர் போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement