வீடு புகுந்து போன் திருடிய நபருக்கு வலை

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, குருசாமி ராஜபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி, 43. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டில் மர்ம நபர் நடமாட்டத்தை உணர்ந்தவர் கூச்சலிட்டுள்ளார். அப்போது, வீட்டில் இருந்து மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார். தமிழ்ச்செல்வியின் மொபைல் போன் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement