மோடியின் நடவடிக்கைக்கு துணை நிற்போம்: நாகேந்திரன்

சென்னை : பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு அனைவரும் துணை நிற்போம்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

பிரதமர் மோடியின் துணிச்சலான தலைமையின் கீழ், புதிய இந்தியாவின் அசைக்க முடியாத உறுதியுடன், ஒளிரும் அடையாளமாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' நிற்கிறது. இது, மற்றொரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள, இந்தியா இனி அமைதியாக இருக்காது என்பதை உலகிற்கு பறைசாற்றப்பட்டுள்ளது. இது தன் மக்களையும், அதன் இறையாண்மையையும் பாதுகாக்க, உறுதிபூண்ட ஒரு நாட்டின் வலிமை, தார்மீக தெளிவை பிரதிபலிக்கிறது.

உலகம் இந்தியாவை பார்க்கும் விதத்தை, பிரதமர் மோடி மாற்றியுள்ளார். பண்டைய மதிப்புகளை கொண்ட ஒரு தேசமாக மட்டுமல்லாமல், ஞானம் மற்றும் வலிமை இரண்டையும் கொண்டு வழிநடத்தும் ஒரு உலகளாவிய சக்தியாக மாற்றியுள்ளார்.

திரங்கா யாத்திரையின் ஒரு பகுதியாக, ஆப்பரேஷன் சிந்துாரின் முக்கியத்துவத்தை தமிழகம் முழுதும் கொண்டு சென்றாலும், மக்களிடமிருந்து குறிப்பாக தமிழகத்தின் தேசியவாத இளைஞர்களிடமிருந்து அற்புதமான வரவேற்பை பெற்றேன். பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு, அனைவரும் துணை நிற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement