ஏமாற்றிய நண்பர் மீது நடிகை புகார்
சென்னை:சென்னையை சேர்ந்த நடிகையும், மாடலிங் துறையிலும் ஈடுபடும் 30 வயது பெண், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதன் விபரம்:
என் கல்லுாரி நண்பரான அலெக்ஸ்பாண்டியன் ஜவஹர், 34, திருமணமாகி, கனடாவில் வசிக்கிறார். அவர், கொடுமைபடுத்தும் மனைவியை விவாகரத்து செய்து, என்னை திருமணம் செய்வதாக கூறிவந்தார்.
இதனால் அவரை திருமணம் செய்ய முடிவு செய்தேன். சென்னை வந்த அவருடன், கடந்தாண்டு டிச., 6ல், சோழிங்கநல்லுாரில் உள்ள விடுதியில் அறை எடுத்து, ஒன்றாக தங்கினேன்.
பின், அவர் கனடா சென்றதும் என்னை கண்டுகொள்ளவில்லை; மனைவியை விவகாரத்தும் செய்யவில்லை. அவரது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார்; என் மொபைல் அழைப்பையும் நிராகரித்து விட்டார்.
அவரது ஒரு நாள் ஆசைக்காக, எட்டு ஆண்டுகளாக என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, முதற்கட்டமாக அலெக்ஸின் பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
-
பா.ஜ., தலைவரை சந்தித்த நிர்வாகிகள்; கிருஷ்ணகிரி அ.தி.மு.க.,வில் சலசலப்பு
-
மோடியின் நடவடிக்கைக்கு துணை நிற்போம்: நாகேந்திரன்