மொபைல்போன் திருடிய பழங்குற்றவாளி கைது

ஈரோடு: ஈரோடு, காமாட்சி காட்டை சேர்ந்தவர் சங்கர், 38; ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த பவானி, பழனிபுரம், கடை வீதியை சேர்ந்த கார்த்தி, 35, சங்கரின் பாக்-கெட்டில் இருந்த மொபைல்போனை திருடிக்கொண்டு ஓடினார். சங்கர் புகாரின்படி ஈரோடு டவுன் கிரைம் போலீசார் கார்த்-தியை கைது செய்தனர்.


கார்த்தி மீது ஈரோடு டவுன், மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன்-களில் திருட்டு வழக்குகள்; பவானி ஸ்டேஷனில் கொலை மிரட்டல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாக தெரிவித்தனர். பழங்குற்றவாளியான அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Advertisement