நகராட்சி குப்பை குடோனில் தீ விபத்து

பவானி,: பவானி நகராட்சியில், 27 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்-பட்ட மக்கள் வசிக்கின்றனர். வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, புது பஸ் ஸ்டாண்ட் அருகில் கிடங்கில் கொட்டப்படுகி-றது.
இங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்பட்டு, மறு சுழற்சி முறையில் பயன்பட்டு வருகின்றன. தற்போது டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் குப்-பையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் புது பஸ் ஸ்டாண்ட், கந்தன் பட்டறை, குமாரபாளையம் செல்லும் சாலை பகுதிக்கும் புகை பரவியது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி புகை மூட்டத்தை
கட்டுப்படுத்தினர்.

Advertisement