தனியார் ஊழியரை தாக்கி பணம் மொபைல் பறித்த வாலிபர் கைது
பர்கூர்: பர்கூர் அருகே காரகுப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 32. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 22ம் தேதி இரவு, 10:30 மணிக்கு, காரகுப்பத்தில், தன் ஹோண்டா டியோ ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, மொபைல்போனில் பேசினார். அங்கு வந்த, 2 வாலிபர்கள், ஏழுமலையிடம் பணம் மற்றும் மொபைல்போனை கேட்டனர். அவர் கொடுக்க மறுக்கவே, பீர்பாட்டிலால் ஏழும-லையை தாக்கிய வாலிபர்கள், ஸ்கூட்டர் மற்றும் 20,000 ரூபாய், ஒரு மொபைல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
தலையில் படுகாயமடைந்த ஏழுமலை புகார் படி, பர்கூர் போலீசார், கிருஷ்ணகிரியை சேர்ந்த அசோக் மற்றும் பாறையூர் மனோஜ், 22, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. இதில் மனோஜை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அசோக்கை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிஷப்புக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி துறப்பு
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
-
இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
Advertisement
Advertisement