தனியார் ஊழியரை தாக்கி பணம் மொபைல் பறித்த வாலிபர் கைது

பர்கூர்: பர்கூர் அருகே காரகுப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 32. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 22ம் தேதி இரவு, 10:30 மணிக்கு, காரகுப்பத்தில், தன் ஹோண்டா டியோ ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, மொபைல்போனில் பேசினார். அங்கு வந்த, 2 வாலிபர்கள், ஏழுமலையிடம் பணம் மற்றும் மொபைல்போனை கேட்டனர். அவர் கொடுக்க மறுக்கவே, பீர்பாட்டிலால் ஏழும-லையை தாக்கிய வாலிபர்கள், ஸ்கூட்டர் மற்றும் 20,000 ரூபாய், ஒரு மொபைல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.


தலையில் படுகாயமடைந்த ஏழுமலை புகார் படி, பர்கூர் போலீசார், கிருஷ்ணகிரியை சேர்ந்த அசோக் மற்றும் பாறையூர் மனோஜ், 22, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. இதில் மனோஜை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அசோக்கை தேடி வருகின்றனர்.

Advertisement