சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்

பீஜிங்: சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மாயமாகி உள்ளனர்.
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
17 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
ஆரூர் ரங் - ,
27 மே,2025 - 22:08 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27 மே,2025 - 21:13 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
-
மீண்டும் 'டோயிங்' நடைமுறை அமைச்சர் பரமேஸ்வர் உறுதி
-
மழை வெள்ளத்தை சமாளிக்க ஒட்டியம்பாக்கம் ஓடை சீரமைப்பு
-
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் தேங்கும் குப்பை மாமன்ற கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
-
மூடிய சர்க்கரை ஆலைகளை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
-
பார்வையாளர்கள் நிரம்பி வழியும் டவர் பூங்கா பராமரிப்பு படுமோசம்
Advertisement
Advertisement