நாமக்கல், மோகனுார் உழவர் சந்தையில் காய்கறி ரூ.27.26 லட்சத்திற்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல், மோகனுார் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 71 டன் காய்கறி, 27.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


நாமக்கல் கோட்டை சாலை மற்றும் மோகனுாரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்-கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்-றுக்கிழமைகளில், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்-தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மொத்தம், 226 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்-தனர். 54,531 கிலோ காய்கறிகள், 16,628 கிலோ பழங்கள், 35 கிலோ பூக்கள் என மொத்தம், 71,194 கிலோ எடையுள்ள விளை-பொருட்கள், விற்பனை செய்யப்பட்டது. அவற்றை, 14,838 நுகர்வோர் வாங்கி சென்றனர். அதன் மூலம், 27 லட்சத்து, 26,032 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement