ஜார்க்கண்டில் தேடப்பட்டு வந்த நக்சலைட் சுட்டுக்கொலை

ராஞ்சி: ஜார்க்கண்டில் தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பைச் சேர்ந்தவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.


லதேஹர் மாவட்டத்தில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரு தரப்பினரிடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.


நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரையில் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில், ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்ட தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பைச் சேர்ந்த கமெண்டர் மனிஷ் யாதவை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும், மற்றொரு நக்சலைட்டான குந்தன் கேர்வார் கைது செய்யப்பட்டான். இவனுக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.


தொடர்ந்து, அப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியுள்ளனாரா? என்று பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Advertisement