தேசியக்கொடியுடன் பா.ஜ.,வினர் ஊர்வலம்

கம்பைநல்லுார்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, தீவிரவாதிகள் முகாம் மற்றும் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய, சிந்துார் ராணுவ தாக்குதல் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், இந்-திய படைக்கு நன்றி தெரிவித்தும் நேற்று, கம்பைநல்லுாரில், மொரப்பூர் மேற்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில், மூவர்ணக்கொடி வெற்றி ஊர்வலம் நடந்தது. மேற்கு மண்டல தலைவர் சூரிய-மூர்த்தி தலைமை வகித்தார்.


* பாப்பிரெட்டிப்பட்டியில், பா.ஜ., சார்பில், தேசியக்கொடி பேரணி நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் துவங்-கிய பேரணிக்கு, பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய மண்டல தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வித்யா துவக்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய முன்னாள் மண்டல தலைவர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். பா.ஜ., நிர்வாகிகள், முன்னாள் ராணுவத்தினர், பொது-மக்கள் கலந்து கொண்டு, தேசியக்கொடியை கையில் ஏந்தி பேர-ணியாக சென்றனர். பேரணி தர்மபுரி - ரோடு, நான்கு ரோடு, பிள்-ளையார் கோவில் தெரு, கடைவீதி வழியாக சென்று பஸ் ஸ்டாண்டில் பேரணி நிறைவு பெற்றது.

Advertisement