இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்...

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, பிரனாய் வெற்றி பெற்றனர்.
சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, கனடாவின் வென் யு ஜங்கை சந்தித்தார். சிந்து 21-14, 21-9 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா, முதல் செட்டை (21-14) வென்ற போதும், பின் 21-14, 18-21, 11-21 என தாய்லாந்தின் சுபனிதாவிடம் தோல்வியடைந்தார்.
இந்தியாவின் அன்மோல் கார்ப், 11-21, 22-24 என சீனாவின் சென்னிடம் தோற்றார்.
பிரனாய் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய், டென்மார்க்கின் முன்னணி வீரர் ராஸ்மஸ் கெம்கேயை, 19-21, 21=16, 21-14 என போராடி வீழ்த்தினார். இந்தியாவின் பிரியான்ஷு, 21-14, 10-21, 14-21 என ஜப்பானின் நரவோகாவிடம் வீழ்ந்தார்.
கிரண் ஜார்ஜ் 19-21, 17-21 என சீனாவின் வெங் ஹாங்கிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையரில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா ஜோடி 18-21, 13-21 என சீனாவின் செங் ஜிங், ஜங் சி ஜோடியிடம் வீழ்ந்தது.
மேலும்
-
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் கமல்; வேட்பாளர்கள் அறிவித்தது தி.மு.க.!
-
த.வெ.க., நிர்வாகிகளை தாக்குவதா? தி.மு.க.,வுக்கு சீமான் கடும் கண்டனம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு; ஒரு சவரன் ரூ.71,480!
-
இந்தியா- அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்பு; விக்ரம் மிஸ்ரி பேச்சுவார்த்தை
-
வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!
-
கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்; கோழிக்கோடு, வயநாட்டில் இன்று ரெட் அலர்ட்