சந்தைக்கு வரத்து குறைவு வெற்றிலை விலை உயர்வு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கடத்துாரில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழ-மைகளில், வெற்றிலை வாரச்சந்தை நடக்கிறது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபா-ரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர்.

இங்கு, மணியம்பாடி நல்-லகுட்டல ஹள்ளி, கோம்பை, அஸ்தகியூர், முத்தனுார், கேத்தி-ரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி, வேப்பிலைபட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்-தனர். கடந்த வாரம், 128 கட்டு கொண்ட ஒரு மூட்டை வெற்-றிலை, ஆரம்ப விலை, 3,000 முதல், அதிகபட்சமாக, 8,000 ரூபாய் வரை விற்பனையானது, நேற்று நடந்த வாரச்சந்தையில் ஆரம்ப விலை, 5,000 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 10,000 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, 2,000 ரூபாய் விலை கூடுதலாக விற்பனையானது.

Advertisement