மாவட்ட நுாலகத்தில் கோடை கால பயிற்சி

கரூர்: கரூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கு கோடைகால பயிற்சி முகாம் நடந்தது.


இதில், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். இங்கு, கணினி கற்றல் பயிற்சி, ஓவிய பயிற்சி, கலை, கைவினை பொருட்கள் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்றுனர் சோபிகா, அடிப்படை கணினி குறித்து பயிற்சிய-ளித்தார். ஓவிய ஆசிரியர் துரைராஜ், ஓவிய பயிற்சியளித்தார். ஆசிரியர் லதா கலை, கைவினை பொருட்கள் செய்ய கற்று கொடுத்தார். 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்-டனர். நிகழ்ச்சியில் மாவட்ட மைய நுாலகர் மேரி ரோசரி சாந்தி, நுாலகர் சுகன்யா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement