போதை மாத்திரை விற்றவர் கைது
பள்ளிப்பாளையம் பூலக்காட்டூர் பகுதியில், போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.பள்ளிப்பாளையம் அருகே, பூலக்காட்டூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடந்து வந்தது. இது குறித்து வந்த தகவல்படி, பள்ளிப்பாளையம் போலீசார் பூலக்காட்டூர் பகுதியில் நேற்று கண்காணித்தனர். அப்போது சந்திரசேகர், 25, என்பவர் போதை மாத்திரை விற்பனை செய்து வருகிறார் என தெரியவந்தது.
இதையடுத்து, சந்திரசேகரை நேற்று மாலை கைது செய்து, இவரிடம் இருந்து, 10 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 100 ரூபாய்க்கு மாத்திரை வாங்கி, 300 ரூபாய்க்கு சந்திரசேகர் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போதை மாத்திரையை வாங்கும் இளைஞர்கள், தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் உடலில் செலுத்துவர். சிறிது நேரத்தில் போதை வந்து விடும் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'லிப்ட்'டில் சிக்கிய மகன் பதற்றத்தில் தந்தை மரணம்
-
தங்கத்தேர் இழுப்பில் கோஷம்; தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்
-
ஆதிமூல பெருமாள் கோவிலில் ரூ.3.37 கோடியில் திருப்பணி
-
கூட்டணியில் சேர்ந்தால் எம்.பி., பதவி; பா.ம.க.,விடம் இ.பி.எஸ்., கறார் பேரம்
-
மோசடி பத்திரங்களை ஐ.ஜி., ரத்து செய்யலாம்: மத்திய அரசின் புதிய சட்டத்தில் வழிவகை
-
யாரை காப்பாற்ற இந்த வேகம்?
Advertisement
Advertisement