சிலம்ப போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு



ஊத்தங்கரை ;நேபாளத்தில் சர்வதேச சிலம்ப போட்டி கடந்த, 17ல் நடந்தது. இதில், தொடுமுறை, ஒற்றை கொம்பு, இரட்டை கொம்பு, வேல்கொம்பு, சுருள்வாள், மான்கொம்பு, வாள்வீச்சு போன்ற பிரிவுகளில் வயது வாரியாக போட்டிகள் நடந்தன. ஊத்தங்கரை பேரொளி சிலம்பப்பள்ளி மாணவ, மாணவியர், 16 பேர் இந்தியா சார்பில் கலந்து கொண்டனர்.


இதில், 10 மாணவர்கள் முதலிடமும், 10 மாணவர்கள், 2ம் இடமும் பிடித்தனர். இதில், 2 மாணவர்கள் ஒவ்வொருவரும், 3 போட்டிகளிலும், ஒரு மாணவர், 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். ஊத்தங்கரைக்கு பெருமை சேர்த்த இம்மாணவர்களுக்கு பாராட்டு விழா, ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் சார்பில் நேற்று நடந்தது.

Advertisement