இளைஞர்கள் நெஞ்சில் சாவர்க்கர் சிந்தனை தேவை

8

சர்வதேச அரசியல் ஆளுமைகளுடன், தொடர்பு கொண்டு இருந்த சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் ஆயுதப் போராட்டத்தை துவங்கினார். சாவர்க்கர் கொடுத்து அனுப்பிய, கைத்துப்பாக்கியை பயன்படுத்தித்தான், வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக்கொன்றார்.

இந்திய விடுதலைக்காக போராடி, இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சாவர்க்கரை, இன்றைக்கு சில அமைப்பினர் தவறாக விமர்சனம் செய்கின்றனர்.

சாவர்க்கர், ஹிந்து மகாசபை என்ற அமைப்பை நிறுவி, 'ஹிந்துத்துவா' என்ற சனாதன அரசியல் கொள்கைகளுக்கு வடிவம் கொடுத்தார். 'ஹிந்துக்களை ராணுவமயமாக்க வேண்டும், ராணுவத்தை ஹிந்துமயமாக்க வேண்டும், சுதந்திர இந்திய சர்க்கார் நிறுவப்பட வேண்டும்' என சொன்ன, வீரசாவர்க்கரின் சிந்தனைகளை, இளைஞர்கள் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

- அர்ஜுன் சம்பத்,

நிறுவன தலைவர், ஹிந்து மக்கள் கட்சி

Advertisement