கரும்பு நிலுவை வழங்கல்
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலக்கோட்டிலுள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின், 2024-25ம் ஆண்டு அரவை பருவத்தில், கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை, 5.02 கோடி ரூபாய் வழங்க வேண்டியிருந்தது.
இதை வழங்கக்கோரி, விவசாயிகள் ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகியோர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். முதல்வர் ஸ்டாலின் கரும்பு நிலுவைத்தொகையான, 5.02 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டதை அடுத்து, இத்தொகை, கரும்பு வழங்கிய விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை எழாது': பலாத்கார வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
-
அகாலிதளத்தின் முக்கிய தலைவர் சுக்தேவ் மறைவு: அரசியல் கட்சியினர் இரங்கல்
-
பிரசன்ன மஹா கணபதி கோவில் கும்பாபிஷேக தின உற்சவம்
-
பாக்., எல்லையை ஒட்டிய மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைப்பு
-
மகன் மார்க் குறைவால் பெண் டாக்டர் தற்கொலை
-
பழங்குடியின வாலிபரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம்: இருவர் கைது
Advertisement
Advertisement