மகன் மார்க் குறைவால் பெண் டாக்டர் தற்கொலை
வேலுார் : வேலுார் காட்பாடியை சேர்ந்தவர் காமேஷ், 48. இவரது மனைவி சுமித்ரா, 44. இருவரும் பல் டாக்டர்கள். காந்தி நகரில் சொந்தமாக கிளீனிக் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன். இவரை பல் டாக்டருக்கு படிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அவர் பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றிருந்ததால், பல் டாக்டருக்கு சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மன உளைச்சலில் சுமித்ரா இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மகனுடன் சண்டையிட்டு சாப்பிடாமல் இருந்தார்.
பின்பு, நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் துாங்கி கொண்டிருந்தவர் திடீரென காணவில்லை. அதிகாலை எழுந்த காமேஷ், தன் மனைவி சுமித்ராவை தேடியபோது, வீட்டின் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்
-
நிர்வாகிகளை நீக்கும் ராமதாஸ்... சேர்க்கும் அன்புமணி; பா.ம.க.வில் வெடித்து கிளம்பிய பூசல்
-
நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை மையம்!
-
வழக்குகளை விரைவில் முடிக்க போலி குற்றவாளிகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
-
கன்னட மொழி, இனம் எப்போது எந்த காலகட்டத்தில் தோன்றியது; சீமான் கேள்வி
Advertisement
Advertisement