மகன் மார்க் குறைவால் பெண் டாக்டர் தற்கொலை

வேலுார் : வேலுார் காட்பாடியை சேர்ந்தவர் காமேஷ், 48. இவரது மனைவி சுமித்ரா, 44. இருவரும் பல் டாக்டர்கள். காந்தி நகரில் சொந்தமாக கிளீனிக் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன். இவரை பல் டாக்டருக்கு படிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், அவர் பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றிருந்ததால், பல் டாக்டருக்கு சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மன உளைச்சலில் சுமித்ரா இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மகனுடன் சண்டையிட்டு சாப்பிடாமல் இருந்தார்.

பின்பு, நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் துாங்கி கொண்டிருந்தவர் திடீரென காணவில்லை. அதிகாலை எழுந்த காமேஷ், தன் மனைவி சுமித்ராவை தேடியபோது, வீட்டின் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement