வங்கி ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை

திருவனந்தபுரம் : கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகேயுள்ள கடக்காவூர் பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். அங்குள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்தார்.

நேற்று, விடிந்து வெகுநேரமாகியும் அவரது வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டிற்குள் அனில்குமார், 55, அவரது மனைவி ஸ்ரீஜா, 50, மகன்கள் அஸ்வின், 25, ஆகாஷ், 22, ஆகியோர் தனித்தனியாக துாக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணையை துவக்கினார். அனில்குமார் வீட்டில் தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். கடன் பிரச்னையால் அவர்கள் தவித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement