ஊட்டி-கூடலூர் சாலையில் நிலச்சரிவு அபாயம்: இரவு நேரம் வாகனங்கள் செல்ல தடை

ஊட்டி: நிலச்சரிவு அபாயம் காரணமாக ஊட்டி-கூடலூர் சாலையில் இரவு நேரம் வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
அடுத்து வரக்கூடிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து,ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
மேலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகளில் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடுவட்டம்-கூடலூர் சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் அந்த சாலையில் தற்காலிகமாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையில் கனரக வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமான மற்றும் அவசர கால உள்ளூர் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
சில்வர் பீச்சில் நவீன வசதிகள் முதல்வர் காணொளியில் திறப்பு
-
துவக்கம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து... மாவட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி
-
குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத்துறை அறிவுரை
-
உழவரைத் தேடி திட்டம் துவக்கம் விவசாயிகளுக்கு இடுபொருள்
-
மாணவர்கள் கோல்ப் பயிற்சி நெய்வேலியில் கலெக்டர் ஆய்வு
-
ரூ. 10 லட்சம் பட்டாசு குள்ளஞ்சாவடியில் பறிமுதல்