துவக்கம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து... மாவட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி

காட்டுமன்னார்கோவில்: கர்நாடக மாநிலத்தில் முன்கூட்டியே மழை துவங்கியதால், கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.
கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியின் மூலமாக 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதுமட்டுமின்றி ஏரியில் தண்ணீர் தேக்கி வைத்து, சென்னை மக்களின் தாகம் தீர்க்க குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், கல்லணையில் தேக்கி வைத்து, கீழணைக்கு அனுப்பப்படுகிறது. கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரியில் தேக்கப்பட்டு விவசாயம் மற்றும் சென்னை குடிநீருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தாண்டு ஜனவரி மாதம் கீழணையில் நீர் மட்டம் குறைந்தது. தொடர்ந்து பிப்ரவரி இறுதியில் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்திற்கு மட்டுமின்றி தினமும் 74 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வந்தனர்.
இதன் காரணமாக ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்தது. ஏரியின் மொத்த கொள்ளவான 1,465 மில்லியன் கன அடியில், கடந்த வாரம் 600 மில்லியன் கன அடியாக குறைந்தது. இந்தாண்டு கர்நாடகா மாநிலத்தில், முன்கூட்டியே மழை துவங்கியதால், கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து, அதிகாரிகள் அச்சமின்றி இருந்தனர்.
மேலும் மேட்டூரில் ஏற்கனவே 78 அடி தண்ணீர் இருந்த காரணத்தால் வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. எப்படியும் மேட்டூரில் இருந்து விரைவில் வந்து வந்துவிடும் என்ற நம்பிக்கை அடைந்த பொதுப்பணி துறை அதிகாரிகள், கல்லணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை கீழணைக்கு திறந்து விட்டனர்.
கடந்த வாரத்தில் கீழணையில் வந்த தண்ணீர் படிப்படியாக 7 அடி வரை தேக்கப்பட்டது. அதனையடுத்து, கீழணையில் இருந்து வடவாறு வழியாக கடந்த 4 நாட்களுக்கு முன் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் மூலமாக ஏரியின் நீர் மட்டம் 500 மில்லியன் கன அடியாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் ஏரியின் நீர் மட்டம் உயரத் துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக ஏரியின் மொத்த கொள்ளவான 1,465 மில்லியன் கன அடியில் 1,250 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. அதே வேளை ஏரியில் இருந்து வி.என்.எஸ்.மதகு வழியாக 65 கன அடியும், சென்னை குடிநீருக்கு 74 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே நிலையில் தண்ணீர் வரத்து தொடர்ந்தால், விரைவில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என எதிபார்க்கப்படுகிறது.
மேலும்
-
தீவிரமடையும் இந்தியா - வங்கதேச பிரச்னை; எல்லைகள் நடுவே சிக்கி தவிக்கும் மக்கள்
-
கன்னட மொழி குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு; மன்னிப்பு கேட்க முடியாது: கமல் அறிவிப்பு
-
இலக்கியத்தில் இருந்து மக்கள் உத்வேகம் பெற வேண்டும்: தேசிய இலக்கிய மாநாட்டில் ஜனாதிபதி பேச்சு
-
மாநிலங்களுக்கு ரூ.81,735 கோடி வரிப்பகிர்வு
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இன்ஜினியர் கைது
-
ஊருணிக்கு குளிக்க சென்ற 2 சிறுமிகள் மூழ்கி பலி