குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத்துறை அறிவுரை

மந்தாரக்குப்பம்: வைரஸ் காய்ச்சல் பரவமால் தடுக்க பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் பருவமழைக்கு பின் பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், தொண்டைவலி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அருண்ராஜ் கூறியதாவது:

மாறி வரும் சீதோஷ்ண நிலையால் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெளியிடங்களுக்கு செல்லும் போதும் நோய் தொற்று பரவாமல் தடுக்க 'மாஸ்க்' அணிந்து செல்வது அவசியம்.

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவமால் தடுக்க பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். வீடுகளை சுற்றிலும், கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement