ரூ. 10 லட்சம் பட்டாசு குள்ளஞ்சாவடியில் பறிமுதல்

குள்ளஞ்சாவடி: அனுமதியின்றி கொண்டு வந்த ரூ. 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குள்ளஞ்சாவடி, சந்தைப்பேட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அதிக அளவிலான பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதில், பட்டாசுகள் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், சந்தைப்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர், 43; என்பவர் பட்டாசு கடை நடத்தி வருவதும், வியாபாரத்திற்காக சிவகாசியில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி பட்டாசுகள் வாங்கி வந்ததும் தெரிய வந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து ராஜசேகரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து, குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement