சாக்கடையில் விழுந்தவர் பலி

திண்டுக்கல்: சவடக்காரர் தெருவை சேர்ந்தவர் கார் டிரைவர் நாகராஜ் 46. குடும்ப பிரச்னை காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

மன உளைச்சலில் இருந்த நாகராஜ் , ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்ற போது ரோட்டோர சாக்கடையில் குடி போதையில் தவறி விழுந்து இறந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement