காட்சிபொருளான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது

நடுவீரப்பட்டு: பாலுார் அடுத்த சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் காட்சி பொருளாக இருந்து வரும் மேல்நிலைநீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ருட்டி அடுத்த அண்ணாகிராம ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி சன்னியாசிப்பேட்டை. இந்த ஊராட்சியில் உள்ள காந்திநகரில் குடிநீர் தட்டுபாடு இருந்ததால் கடந்த 2021-2020 நிதி ஆண்டில் 15 வது நிதிக்குழு மான்ய நிதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலைநீர்தேக்க தொட்டி ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டிக்கு பம்ப் ரூம் இல்லாததால்,கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய பம்ப் ரூம் கட்டப்பட்டது. ஆனாலும் இதுவரை இந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டிக்கு மின்இணைப்பு வழங்கி,இந்த மோட்டாரை இயக்கிட ஒன்றிய அதிகாரிகள் முன்வராமல் உள்ளனர்.இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதியடைந்து வருகின்றனர்.
அண்ணாகிராம ஒன்றிய அதிகாரிகள் இந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவார்களா?
மேலும்
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
-
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்: கொலம்பியாவில் சசிதரூர் கடும் தாக்கு