மகள் மாயம் தாய் புகார்

வடலுார்: மகள் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்தார்

வடலூர் அடுத்த மேற்கு ரோட்டு மருவாய், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல் மனைவி, பத்மா, 40. இவரது மகள் கீர்த்திகா, 27. இவர், 3 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தாய் வீட்டில், மகன் மற்றும், மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து திடீரென கீர்த்திகா மாயமானார். பத்மா அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement