பாக்., விமானப்படை தளங்களை தாக்கிய பிரமோஸ் ஏவுகணை: ஒப்புக் கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது தங்கள் நாட்டு விமானப்படை தளங்கள் மீது பிரமோஸ் ஏவுகணை மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக் கொண்டு உள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவை நோக்கி ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்தது. அது அனைத்தையும் இந்தியா முறியடித்தது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது நமது நாட்டு விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனால், அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன பாகிஸ்தான், போரை நிறுத்தும்படி இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ.,விடம் கெஞ்சியது. இதனையடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது: மே 9 -10ம் தேதி இரவுகளில் இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது என முடிவு செய்தோம். காலை 4:30 மணிக்கு பிறகு தொழுகைக்கு பிறகு தாக்குதல் நடத்துவது என படைகள் தயாராகி வந்தன. ஆனால், அதற்கு முன்னர், பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ராவல்பிண்டி விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அதிகாலை என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.







மேலும்
-
காரில் சென்று 40க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு; பலே கில்லாடி கைது
-
முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!
-
குலசாமி, குல தெய்வம்: ராமதாசை புகழ்ந்து தள்ளிய அன்புமணி!
-
சென்னையில் களைகட்டிய மீன்வள திருவிழா
-
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; குமரி, நீலகிரியில் இயல்பை விட கூடுதல் மழைப்பொழிவு
-
கடத்தல் கும்பலிடம் இருந்து எறும்புத் திண்ணிகள் மீட்பு; வனத்துறை நடவடிக்கை