மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவி மூன்றாமிடம்  

கடலுார்: ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில் கடலுார் மாணவி மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தார்.

தமிழ்நாடு அளவிலான சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சீனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி ஈரோடு கிரான்ட்ஸ்லாம் டென்னிஸ் அகாடமியில் நடந்தது. இதில் கடலுார் மாவட்டம் சார்பில் மாணவி வேல்விழி பங்கேற்று, சீனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் மூன்றாமிடம் பிடித்தார்.

வெற்றி பெற்ற மாணவியை தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்க செயலாளர் கவிதா செம்பன்னன், கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட சாப்ட் டென்னிஸ் சங்க செயலாளர் சித்ரா அப்பாதுரை, தலைவர் கிருஷ்ணசாரதி, பொருளாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் பயிற்சியாளர் பாராட்டினர்.

Advertisement