2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட், நாளை 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம்

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக வானிலை மையத்தின் ரெட் அலர்ட் அறிவிப்பு எதிரொலியாக, கடந்த 2 நாட்களாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகளும் விதித்துள்ள மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது. இந் நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது;
தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு காணப்படுகிறது. நாளை நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, தென்காசி,, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு வானிலை மையம் கூறி உள்ளது.

மேலும்
-
நீரில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் பலி: குளிக்க சென்ற இடத்தில் சோகம்!
-
ஒரே ஷிப்டில் முதுநிலை நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: மும்பை அணி பேட்டிங்
-
இந்தோனேசியா கல் குவாரியில் பாறை சரிந்ததில் 13 பேர் பலி: 12 பேர் படுகாயம்
-
பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா
-
பா.ம.க.,வில் நிலவும் குழப்பம் தற்காலிகமானது; சரிப்படுத்தி விடுவேன் என்கிறார் அன்புமணி