அஞ்சல் சேவை மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 11ம் தேதி நடக்கிறது
கடலுார்: அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்றத்தின் கூட்டம் அடுத்த மாதம் 11ம் தேதி அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
இது குறித்து அஞ்சலங்களின் கண்காணிப்பாளர் கலைவாணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்றத்தின் கூட்டம் அடுத்த மாதம் 11ம் தேதி 12:00 மணிக்கு கடற்கரை சாலையில் உள்ள அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இக் கூட்டத்தில் கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை விவாதிக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும்.
இம்மன்றத்தின் விவாதத்துக்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதாவது இருப்பின் அவைகளை அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலுார் கோட்டம், கடலுார் என்ற முகவரிக்கு எதிர்வரும் ஜூன் 9ம் தேதிக்கு முன்பாக கிடைக்குமாறு எழுதி அனுப்பும்படி இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும்
-
அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்: மகன் மீது தந்தை ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு
-
கமலுக்கு மிரட்டல்; முதல்வர் அமைதியாக இருப்பது ஏன்: சீமான் கேள்வி
-
பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்: ஆசிரியர் டூ நடிகர்: ‛‛அந்த 7 நாட்கள்'' ராஜேஷின் வாழ்க்கை பயணம்
-
உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஜெர்மனி ; அதிபர் மெர்ஸ் எடுத்த முடிவு
-
பிரதமரை பாராட்டியதால் கடும் அதிருப்தி: காங். எம்.பி. சசிதரூருக்கு பா.ஜ., ஆதரவுக்கரம்
-
மதுரையில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு