விஜய் 'பச்சா' என்றால் உதயநிதி 'சோட்டா பச்சா'

1

சென்னை : 'விஜய் பச்சா என்றால், உதயநிதி சோட்டா பச்சா' என, த.வெ.க., கொள்கை பரப்பு செயலர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:



வியாசர்பாடி விவகாரத்தில், எங்கள் கட்சி மகளிர் அணியினர் தாக்கப்பட்டுள்ளனர். இனிமேல் எங்கேயாவது த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் தாக்கப்பட்டால், மக்கள் போராட்டமாக வெடிக்கும். பாசிசத்துடனும், பாயாசத்துடனும், எங்களுக்கு கூட்டணி கிடையாது.

தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை தவிர்த்து, எங்கள் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும், அவர்களுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம். மக்கள் சக்தியோடு தான் எங்களுக்கு கூட்டணி.

விஜயகாந்த் கட்சி துவங்கியபோது, மக்கள் சக்தியோடு தான் கூட்டணி எனக் கூறியதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அவர் கூட்டணி அமைத்த பின், அவருடைய நிலைமை என்ன ஆனது என்பதை ஊடகங்கள் அறியும். 'நேற்று முளைத்த காளான் பச்சா' என அமைச்சர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

அவர்கள் உதயநிதியை குறிப்பிட்டு கூறுகின்றனரோ என எண்ணத் தோன்றுகிறது. எங்கள் தலைவர் விஜய் பச்சா என்றால், உதயநிதி சோட்டா பச்சா. பொறுப்பான அமைச்சர்கள், பொறுப்பாக பேசுவர் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement