ஏழை பாதிக்கும் கொள்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: '' ஏழைகளை பாதிக்கும் கொள்கைகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுக்கப்பட வேண்டும், '' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தங்க நகைக்கடன்கள் தொடர்பான வரைவு வழிகாட்டுதல்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் நான் எழுப்பிய பிரச்னைகளுக்கு நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது என்பது மகிழ்ச்சி.
விவசாயிகள் மற்றும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் போன்ற சிறிய கடன் வாங்குபவர்களின் நலன்களை பாதுகாப்பதும், சரியான நேரத்தில் மற்றும் அணுகக்கூடிய கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன்.
இந்தப் பிரச்னை குறித்து நேர்மறையாக பரிசீலனை செய்ததை பாராட்டுவதோடு, ஏழைகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கைகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் முன்கூட்டியே ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.









