ஊத்துக்கோட்டையில் ஜமாபந்தி நிறைவு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் 20ம் தேதி முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், தலைமையில் நடந்தது. ஏழு நாட்கள் நடந்த நிகழ்வில் இலவச வீட்டு மனை, பட்டா மாற்றம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 776 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 215 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மீதியுள்ள மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என, தாசில்தார் ராஜேஷ் தெரிவித்தார்.
நேற்று நடந்த ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்வில், அத்தங்கிகாவனுார் கிராமம், கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் எங்களுக்கு பட்டா வழங்கவில்லை என, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமாரை சூழ்ந்து கொண்டு கேட்டனர். அதற்கு அவர் தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா ஓரிரு நாட்களில் உங்களின் வீடுகளுக்கே வந்து வருவாய் துறையினர் வழங்குவர் என, தெரிவித்தார்.
மேலும்
-
புலி மனிதர் என அழைக்கப்படும் வால்மீக் தாப்பர் காலமானார்
-
முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ: மதுரையில் துவக்கம்
-
தமிழகத்தில் இயல்பை விட 97 சதவீதம் அதிகமாக மழைப்பொழிவு
-
தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகள் 8 பேர் போலீசில் சரண்
-
துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியாவுக்கு உடன்பாடில்லை: சசிதரூர்
-
காரில் சென்று 40க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு; பலே கில்லாடி கைது